தாயின் மடி தேடி இருக்கிறேன், வளர்ந்த பருவத்தில் கிடைத்ததில்லை,,,,,,,,,,,,,,, . இப்போது உணருகிறேன், இப்படி தான் இருக்குமோ தாயின் மடி , இத்தனை சுகமாக ?
என் முதல் கவிதை அனுபவம் ,,,,,,,,,,,,,,,,,,
வீணையை மீட்டினால் ஸ்வரம் எழும் என்பார்கள் என்னை ஒரு வீணை மீட்டியத்தில் எழுந்த ஸ்வரங்கள் தான் இவை அத்தனையும் அதை அந்த வீணைக்கே கொடுப்பதுதான் ஞாயம் அல்லவா ?
இவ்வுலகின் அதிஅற்புதமான
கவிதை...
என் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டிருக்கிறது
நான் உன்னில் என்னைத்தொலைத்துவிட்டு சிரித்துக்கொண்டிருகிறேன்
இனியவளே! நான் பிறந்தவுடன் கண் திறந்தேன்... உன்னை காதலித்தவுடன் நினைவு மறந்தேன்... நீ மறந்தவுடன் உயிர் துறப்பேன்...! இது சத்தியம் ,,,,,,,,,,,,,,, இது சத்தியம்
உந்தன் குறும்புகள் ம்ம்ம் முதல் முதல் புன்னகை முகத்தோடு கல்லூரி வாசலிலே நீ காத்திருந்த ஞாபகம் எப்போது நினைத்தாலும் என்னை மலரவைக்கும்
கோபப்படுவது அழகல்ல என்றாலும் நீ கோபப்படும் போது அழகாயிருக்கிறாயே உன் செல்லக் கோபத்திற்க்காக தினம் தவறாமல் தவறு செய்யகிறேன்
தன் நிழலை தானே தாங்கும் தஞ்சை கோபுரத்தை போல உனக்கான என் காதலையும் , எனக்கான உன் காதலையும் நானே சுமந்து கொள்கிறேன் கடைசி வரை
அப்பாவும் அம்மாவும் தராத அரவணைப்பை பொம்மைக்கு தந்தபடி உறங்கிக்கொண்டிருந்தது குழந்தை. கனவில் தோன்றிய கடவுள்கள் அச்சிறு குழந்தையின் அரவணைப்பை வரமாய் கேட்டனர். வரிசையில் நின்றிருந்த கடவுள்களுக்கு உறக்கப்புன்னகையை தந்துவிட்டு பொம்மையை இறுக்கி அணைத்துக்கொண்டதது. பொம்மையாதலின் வழிமுறைகள் அறியாமல் விழித்தபடிநின்றனர் கடவுள்கள்.
கண்களைமூடிக் கைகளைக் கூப்பியிருந்தான் அவன் இதயம் மட்டும் திறந்திருந்தது
எதிரே நிற்கும் எழிலின் இமைகள் திறக்கும் எப்போதென்று
வறுமை -அந்த சிறுவன் நேற்று மட்டும் அதிக நேரம் படித்தான். ”பரிட்சை” நெருங்குவதால் அல்ல, நேற்று ”பௌர்ணமி” என்பதால்.
தீபாவளியன்று புது தாவணியோடு உன்னை பார்த்ததை விட சிறந்த சிறப்பு நிகழ்ச்சியை நான் வேறு எந்த தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லை.
போகிற போக்கில் ஓரப்பார்வை வீசிச் செல்லும் உன் கண்களில் இருக்கிறது ஒளி வீசும் தீபாவளி!
எந்த தேர்விற்கும் நான் இவ்வளவு தயார் செய்ததில்லை உன்னுடன் பேசும் முன்பு என்ன பேச வேண்டும் என பட்டியல் இடுகின்றேன்
நான் பேச நினைக்கையில் நீ பேசுகிறாய் மௌனமாகி விடுகிறேன்
நான் பேசுகையில் நீ இல்லாது போகிறாய் மௌனமாகி விடுகிறேன்
நான் மௌனிக்கையில் நம் சம்பாஷனை நிகழ்கிறது பெரும் பெரும்வெளியில்
எப்போதாவது வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!
எதிர்பாராத மழையில் உன் தோழிகள் "ஐயோ மழை !" என்று சிதறி ஓடினார்கள்.... நீ மட்டும், "அய் மழை!" என்று மழையில் நனைந்தாய். அன்றுதான் முதன்முதலில் ரசிக்கஆரம்பித்தேன் மழையையும், உன்னையும்!
பசுமையான வயல்வெளி தூரத்தில் சிரித்துக் கொண்டேக் கையசைக்கும் நீ எப்போதும் என் கண் பார்த்துப் பேசும் நீ, நிலம் பார்த்துப் பேச ஆரம்பித்தக் கணத்தில் நமக்குள் பிறந்தது காதல் !
மழை வரும் நேரம் தலை சுமக்கும் பூக்கள் நனையாமல் குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த மல்லிகைச் செடி நீ!
குவிந்திருந்தாலும் விரிந்திருந்தாலும் மல்லிகை…துக்கத்தில் இருந்தாலும் சந்தோஷத்தில் இருந்தாலும் உன்னைப்போல அழகுதான்…
எனக்குள்ளே உன்னைப்பற்றி வரைந்த ஓவியத்தை தினம் தினம் கனவில் மீட்டி கண்டுகொள்கின்றேன் நிழல்படம் சிலநொடி நேர்த்தியற்றதாக இருக்கலாம் நிஜம் நீ என்றென்றும் மாறமாட்டாய்
அவளே என் பெளதிக நங்கை,,,,,,,,,,,,,,,,,,
பேச்சினிலே பேணுாயி தேற்றம் பார்வையிலே பஸ்காலின் தத்துவம் அழகினிலே அம்பியர் ஓட்டம் கண்களிலே கரும்பொருள் கதிர்ப்பு
கரங்களிலே சிலிங்கி குறுக்கலை இயக்கமாய் கைகளிலே இரண்டாம் நெம்பு காதினிலே ஊசல் எளிமை இசை இயக்கமாய் அவளே என் பெளதிக நங்கை
இருளிலே நான் .... வெளிச்சத்தை தேடியபோது .... எனக்காக நீ மின் விளக்காக வரவில்லை .. சூரியனாகவே உதித்தாய் !
தேய்ந்தது ஒரு நிலவு .. இத்தனை பிறைகள் எங்கிருந்து வந்தன ?..
வெட்டிய அவள் விரல் நகங்களா ? ..
தோல்விகளுக்கு காரணம் தேடிக்கொண்டிருக்கிறேன்... வெற்றிக்கு காரணம் நீயாக வந்து நிற்கிறாய்...